Mar 30, 2009

ஒரு காதல் கவிதை

காக்கைக்கு
பகிர்ந்து உண்ணும் குணம்
எப்படி வந்தது?

பூக்கள் பலவும்
பூக்களாகவே இருக்க...
சில பூக்கள் மட்டும் ஏன்
காயாகி கனிகிறது ?

எத்தனையோ மேடுகளைக்
கடந்து வரும் கடல் அலை ...
சிறு மணல் மேட்டில்
உடைந்து திரும்புகிறது.

வண்டும் வண்ணத்துப் பூசயும்
தேனை குடிக்கிறது
தேனீ மட்டும் சேகரிக்கிறது.

இவற்றிற்கு காரணம் இயற்கை!

ஆயிரம் ஆயிரம்
அழகிய பெண்களின் நடுவே...
ஒருத்தி மட்டும் கவனம் திருப்புகிறாள்

ஆயிரம் ஆயிரம்
இளைஞர்களின் நடுவே
ஒருவன் மட்டும் கவரப் படுகிறான்.
இத்தகு காரணம் காதல்!!

காதலும் இயற்கை தானே ?
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: