குடைக்குள் மனைவி
பேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்!
நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது - காதல்!
மிக அழகானது கோபம்
உன் முகம் சிவக்க வைப்பதால்!
குளிர் மழையில் காதலி
என் மனதில் காட்டுத்தீ!
ஆடியில்தான் தேர் வருமென்ற
அம்மாவுக்குத் தெரியாது -
நாளும் நீ என் வீதியைக் கடப்பது!
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment