- சாய்ந்தது மரம்
நின்றது மழை
ஈரமில்லாத மனிதன். - இணை தேடி வருமா
காணமல் போன
கொலுசு. - திருவிழா வாணவேடிக்கை
பயந்து பறக்கிறன
புறாக்கள். - விபத்துக்கு உள்ளாகி நிற்கும்
பேருந்து முழுக்க
புளியம் பூக்கள். - ஆள்கள் மாறிக் கொள்கிறார்கள்
அய்யோ பாவம்
உழவு மாடுகள். - எப்போதும் இருளாய்
மின் கம்பிகளில்
குருவிக்கூடு. - ஊர்திப்புகை
மூச்சுத் திணரும்
செடிகள். - பாலைவனச் சூடு
நெடுந்தூரப்பயணம்
எங்கே இளைப்பாறும் நிழல்? - சமாதிக்கு மட்டுமன்று
பூக்களுக்கும்
மலர் வளையம்.
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








1 comments:
Pookalukey valaiyam vathuvittaye kanna!!! kavithai nunru
Post a Comment